தங்கவிலையை தாண்டுமோ தக்காளி விலை? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தக்காளி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன் பின்னர் மாநில அரசு நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்ய தொடங்கியது. அதன் காரணமாக ரூபாய் 90 வரையிலும் தக்காளி விலை குறைந்தது.

தற்போது மீண்டும் பல மாநிலங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

1200 டன் தக்காளிகள் தேவை என்கிற நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று வந்தன. அதன் காரணமாக நேற்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, இன்று ஒரே நாளில் ரூபாய் 30 உயர்ந்து ரூ.140க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாம் ரகத் தக்காளி 130 ரூபாய்க்கும், மூன்றாவது ரக தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் 100 ரூபாயைத் தாண்டியே மொத்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது

சந்தைகளில் இருந்து தக்காளி வாங்கிச் சென்று விற்பனைச் செய்யும் இறுதி வியாபாரி தங்களது கடைகளில் அதிகபட்சமாக ரூபாய் 170 வரையிலும் விற்று வருகின்றனர்.இதனால் கடும் அதிர்ச்சியடைந்த இல்லத்தரசிகளில் பெரும்பாலானோர் தக்காளி இல்லாத சமையலுக்கு பழகி வருகின்றனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

தங்கவிலையை தாண்டுமோ தக்காளி விலை? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்