பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் ரூ.43.46 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய உயர்மட்டபாலம் அமைக்கும் பணியினை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் குமாரசாமி, மேற்பார்வை பொறியாளர் (பாலங்கள்), மண்டல அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்.








