இன்று (17.07.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தலைமையில், மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவது குறித்து, கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வளர்ச்சி ஆனையர் நா. முருகானந்தம், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






