இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு ஜோன்ஸ் சாலை, ரங்கபாஷ்யம் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு வங்கிப்பற்று அட்டையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் .ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா அவர்கள், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், ஆர்.துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






