எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க கார்ல் மார்க்சு வழியில் உழைப்போம் பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் 205-ஆவது பிறந்தநாள் இன்று. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை முன்மொழிந்தவர் அவர் தான். கார்ல் மார்க்சின் கனவான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை நனவாக்க அவரது பிறந்தநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! – மருத்துவர் ராமதாஸ்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





