குடிசைவீட்டில் இருந்து சாதிக்க துடிக்கும் விளையாட்டு வீரர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவுவாரா?

திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிராமத்தில் ரூ. 500 வாடகையில் சிறிய குடிசை வீடு. ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய சூழநிலை. தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி வேலை செய்கிறார். வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்.
இச்சூழலிலும் ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.
கத்தாரில் நடைபெற்ற ‘டெக்காத்லான்’ தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார் ராஜேஷ். டெக்காத்லான் என்பது லேசுபட்ட காரியமில்லை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பத்துவிதமான போட்டிகள் கொண்டதே டெக்காத்லான்.
இதில்தான் சாதித்திருக்கிறார் நம் தமிழன் ராஜேஷ். இவரின் கனவு “ஒலிம்பிக்கில் தங்கம்” வாங்கி நாட்டை பெருமைப்படுத்த வேண்டுமென்பதே. இவரது சாதனைக்கு நாமும் துணை நிற்போம். கடினமான சாதனையை சாதிக்க துடிக்கும் இந்த இளைஞருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவி புரிவாரா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிசைவீட்டில் இருந்து சாதிக்க துடிக்கும் விளையாட்டு வீரர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவுவாரா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.