76வது குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனவரி 25, 2025 அன்று புது தில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு, ஜனவரி 24 & 25, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு ரொக்கப் பரிசு (முதல் – ரூ. 21,000/-, 2-வது – ரூ. 16,000/- & 3-வது – ரூ. 11,000/-), கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






