தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136க்குட்பட்ட ராமசாமி சாலையில் உள்ள மழைநீர் வடிகாலினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மழைநீர் வடிகாலில் வடியும் மழைநீரானது எம்.ஜி.ஆர். கால்வாயில் சேருமிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் மழைநீர் வடிகால் வழியே நீர் தங்குதடையின்றி வெளியேறி செல்வதை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், வார்டு-186, புழுதிவாக்கம், சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயில் மழைநீர் செல்வதைப் பார்வையிட்டனர். மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் போது, பாதுகாப்பு கருதி ஒருசில இடங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்திட நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
திரு.மா.சுப்பிரமணியன் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு,
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு-168க்குட்பட்ட
செட்டித்தோட்டம் பகுதி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட
சுப்பிரமணியன் சாலை, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு- 176க்குட்பட்ட கல்கிநகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்களைப் பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
அடையாறு மண்டலம், வார்டு-176க்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலை
கல்கி நகர் மழைநீர் வடிகாலில் இருந்து மோட்டார் பம்பு மூலம் வீராங்கல் ஓடையில்
வெளியேற்றுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ச.அரவிந்த் ரமேஷ் அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், நிலைக் குழுத் தலைவர் (கணக்கு) திரு.க.தனசேகரன் அவர்கள், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் திரு.இரா.மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எஸ்.வி.ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வி நிலவரசி
துரைராஜ் அவர்கள், மோகன்குமார், கண்ணன் திருமதி
ரத்னா லோகேஷ், திரு.ஜெ.மணிகண்டன், திருமதி சமீனா செல்வம்
மற்றும் மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.







