இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த தமது எண்ணங்களை மணிகன்ட்ரோலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் உலகளாவிய பங்கு மற்றும் புவிசார் அரசியலின் சவால்கள், நம்பகமான உலகளாவிய நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்த தமது தொலைநோக்குப் பார்வையையும் இந்த நேர்காணலின் போது மோடி பகிர்ந்தார்.
பிரதமரின் உரையாடல் குறித்த மணிகன்ட்ரோலின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம், உலகளாவிய நல்வாழ்வுக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை, நமது வளர்ச்சியின் முன்னேற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான எனது கருத்துக்களை மணிகன்ட்ரோல் உடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டேன்.”







