ஜிம்பாப்வே வெற்றி – ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில்….

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 6 சுற்றில் நேற்று புலவாயோ நகரில் ஜிம்பாப்வே–ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 103 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் அவர், அடித்த 3-வது சதமாக இது அமைந்தது.

சிகந்தர் ராசா 42, லூக் ஜாங்வி 43, கிரெய்க் எர்வின் 25, வெஸ்லி மாதவரே 25, ஜாய்லார்டு கும்பி 21 ரன்கள் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் பயாஸ் பட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 333 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணி ஒரு கட்டத்தில் 46 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான காஷ்யப் பிரஜாபதி 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜதிந்தர் சிங் 2, அகிப் இல்யாஸ் 45, ஜீஷான் மக்சூத் 23, அயன் கான் 47, ஷோயிப் கான் 11, நசீம் குஷி 12, கலீமுல்லா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மொகமது நதீம், பயாஸ் பட்களத்தில் இருந்தனர். முசரபானி வீசிய 47-வது ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. சதரா வீசிய அடுத்த ஓவரில் பயாஸ் பட் 10 ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 49-வது ஓவரை வீசிய ரிச்சர்டு கரவா 3 ரன் மட்டுமே வழங்க ஓமன் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. சதரா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் மக்சூத் (37) ஆட்டமிழந்தார். முடிவில் ஓமன் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகளை பெற்றது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ஜிம்பாப்வே வெற்றி – ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில்….

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு