சென்னை:
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறும் திமுக மாநாட்டை முன்னிட்டு ஒய்எம்சிஏ மைதானம் நடைபெற உள்ள சாலையின் வழிநெடுகிழும் காங்கிரஸ் பேனர்கள் அலங்கரித்துள்ளன
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுக மாநாடு என்றால் திமுக பேனர்கள் முன்னணி பெற்று இருக்கும். ஆனால் இந்த மாநாடு நடைபெறும் ஒய்எம்சிஏ ¬மானம் அமைந்துள்ள சாலையில் வழிநெடுகிழும் காங்கிரஸ் பேனர்கள் வைக்கப்ப்டடுள்ளன. இது வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியினர் சோனியாகாந்தியை வரவேற்க வைத்துள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு பிம்பமாகவே பார்க்கப்படுகிறது.







