19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது, தீதாகப் பேசாதிருங்கள்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். (குறள் 183)
விளக்கம்
ஒருவரைக் காணாத இடத்தில் அவரைப் பழித்துப் பேசி அவரைக் கண்ட இடத்தில் பொய்யாக நடித்து உயிர் வாழ்வதைவிட இறந்து போதல் அவருக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.






