22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்.
===========================================================
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம்
உலகிலுள்ள உயிர்கள் தங்களுக்கு நீர் தந்து உதவும் மழைக்கு என்ன
கைம்மாறு செய்கின்றனர் ? மழை போன்ற வள்ளல்கள் செய்த உதவிகளும்
கைம்மாறு வேண்டாதவை.







