1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. (குறள் 132)
விளக்கம்:
பலவகை அறங்களை ஆராய்ந்து எவ்வளவு கவனமாக வாழ்ந்தாலும் ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு வருந்திப் பேணிக் காக்க வேண்டும். ஏனெனில் அவ்வொழுக்கமே எப்பொழுதும் துணையாக இருக்கும்.







