19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இலலாத போது, தீதாகப் பேசாதிருத்தல்
===============================================================
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
விளக்கம்
ஒருவன் கண் எதிரே நின்று கண்ட்டமின்றிக் கடுஞ்சொற்களைச் சொன்னாலும் அவன் கண் எதிரில் இல்லாதபோது, பின்விளைவை நோக்காது புறம் சொல்லக் கூடாது.







