புதுடெல்லி:
சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புதுடெல்லி, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.
வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான் -3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதை யில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 153 * 163 கி.மீ. ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் இன்று பிரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






