பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் -நகர்ப்புறம் ..

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 2015 முதல் ‘அனைவருக்கும் வீடு’ இயக்கத்தின் கீழ் பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் -நகர்ப்புறம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தகுதி வாய்ந்த அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை குடிமை வசதிகளுடன் கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. 25.06.2015 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் பின்னர் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் கட்டுவதற்கான எந்த இலக்கையும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை. வீட்டுவசதியின் உண்மையான தேவையை மதிப்பிடுவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பி.எம்.ஏ.ஒய்-யு இன் கீழ் தேவை கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன, மேலும் 112.24 லட்சம் வீடுகளின் தேவையைப் பதிவு செய்துள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், 10.07.2023 நிலவரப்படி 118.90 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பளிக்கப்பட்ட வீடுகளில், 112.22 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன அவற்றில், 75.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரூ.2.00 லட்சம் கோடி (தோராயமாக) மத்திய அரசு வழங்கிய உதவியில், இதுவரை ரூ.1.47 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் (2020-21 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை) கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையின் மாநில / யூனியன் பிரதேச வாரியான விவரங்கள் இணைப்பில் உள்ளன.

விரிவாக்கப்பட்ட திட்ட காலத்திற்குள் அதாவது 31.12.2024 வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்தும் நிலையை அமைச்சகம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறது.

முந்தைய வெளியீடுகளின் பயன்பாடு மற்றும் திட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு போதுமான மத்திய உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஆண்டு வாரியாக ஒதுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:

நிதி ஆண்டு
பட்ஜெட் ஒதுக்கீடு (கோடியில்)
2020-21 – 21,000.00
2021-22 – 27,023.97
2022-23 – 28,000.00

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கௌஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் -நகர்ப்புறம் ..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.