சென்னை: மூத்த அமைச்சர்களின் பேசும் வார்த்தைகள் அடிக்கடி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. இதனால் முதல்வருக்கு சங்கடம் ஏற்பட்டு அவரது தூக்கத்தை கெடுக்கிறது. எனவே பொதுமக்களிடம் கூட்டதின் மத்தியில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் பேசும் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப்பொருளாகி வருகிறது. கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுய போது, நாளைக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்ற என்று அச்சத்துடனே தூங்கப்போவதாகவும் சில நாட்களில் தூக்கம் வராமல் தவிப்பதாகவும் கூறியிருந்தார். ஆக பொது இடங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் பெருமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.






