வேளாண் துறையை வலுப்படுத்தும் பிரதமரின் வேளாண் வள மையங்கள்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

சென்னை, ஆக.14:
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது. அதில் 47 சதவீத மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனர். ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு முழுமையான தேவைகளை நிறைவேற்றுவதில் தான் சிறந்த தீர்வு ஏற்படும். இதன் அடிப்படையில், விவசாயிகள் அதிகம் வந்து செல்லும் உர சில்லறை விற்பனை கடை களை பிரதமரின் வேளாண் வளமையங்களாக (பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி கேந்திரா – பி.எம்.கே.எஸ்.கே) மாற்றி, விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், நாட்டின் விவசாயத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வேளாண் வளர்ச்சியை அதிகரிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், இந்த முன்னோடித் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 2,80,000 சில்லறை உரக்கடைகள் விவசாயிகளுக்கான விரிவான சேவை மையங்களாகப் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன.
உரங்கள், விதைகள். பூச்சிக்கொல்லிகள், சிறிய பண்ணை இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வகை யான வேளாண் பொருட்களை விவசாயிகளுக்கு ஒரே இடத்தில் வழங்குவதில் இந்த பிரதமரின் வேளாண் வள மையங்கள் முன்முயற்சி கவனம் செலுத்துகிறது. இதில் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதற்கான ட்ரோன் சேவைகளும் அடங்கும். இதன் மற்றொரு முக்கிய அம்சம் மண் மற்றும் விதைப் பரிசோதனை வசதியை வழங்குவதாகும். விவசாயிகளுக்கு குறிப்பிட்ட மண் மற்றும் பயிர் நிலை மையைப் பற்றிய தகவல்களை வழங்கு வதன் மூலம், சிறந்த முடிவுகளை எடுக்கவும், அதிக மகசூல் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.
இது துல்லியமான வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த மையங்கள் அறிவு மையங்களாக செயல்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் குறித்த முக்கியமான தகவல்களைப் பரப்புகின்றன. தகவல் இடைவெளியைக் குறைப்பதன் மூலம், இந்த மையங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன. இதன் மூலம் அவர்களின் செயல்திறன் மற்றும் வருமானம் அதிகரிக்கிறது.
கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த முன்முயற்சி சிறந்த விவசாய உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்யும்.
அண்மையில் வரும் தகவல்கள் இந்த பிரதம ரின் வேளாண் வள மையங்களின் வெற்றியை நிரூபிக்கின்றன. 27-.07.-2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் 1,25,000 பிரதமரின் வேளாண் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மையங்களுக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை ஏற்கனவே 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், இந்த மையங்களால் ஏற்படும் பலன்களால் அவர்கள் மகிழ்ச்சியடை வதாகவும் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மையங்கள் மூலம் நானோ யூரியா விற்பனையும் நடைபெறுகிறது.
விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதிலும், நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் இந்த பிரதமரின் வேளாண் வள மையங்கள் திட்டம் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாய இடு பொருட்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை எளிதாக்குவதன் மூலமும், நவீன தொழில்நுட்பங் களை விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமும், நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், பிரதமரின் வேளாண் வள மையங்கள், விவசாயிகளுக்கு வளத்தை நோக்கிய புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகின்றன. அரசின் உறுதியான ஆதரவு மற்றும் அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளுடன், பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள் தொடர்ந்து நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்க சிறந்த பங் களிப்பை வழங்கும் என்பது உறுதி என்றார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

வேளாண் துறையை வலுப்படுத்தும் பிரதமரின் வேளாண் வள மையங்கள்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு