சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் விரைவில் இ சேவை வசதியை அறிமுகப்படுத்த கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 33,000-க்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 24,106 கடைகள் முழு நேரமும், 9,708 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இ சேவை வசதியை செயல்படுத்த கூட்டுறவு துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஸ்போர்ட் சேவை, ஆன்லைன் வாயிலாக சேவை கட்டணம் செலுத்துவது, ஆதாரில் திருத்தம், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியா போஸ்ட் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு கிடைக்கும் வரவேற்பின் அடைப்படையில் அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் முன்னுரிமை அடைப்படையில் இ சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






