வாலிபர் பரிதாப சாவு

விலைக்கு வாங்க ஓட்டிப் பார்த்தபோது பைக் விபத்து : வாலிபர் பரிதாப சாவு!

கோவில்பட்டியில் பைக்கை விலைக்கு வாங்குவதற்காக ஓட்டிப் பார்த்த போது, எதிர்பாராத விதமாகச் சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணவரன் (19). இவர், இலுப்பையூரணியைச் சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவதற்காகப் பேசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த நபரிடம் மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்ப்பதற்காகக் கொண்டு வரும்படி அவர் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் தோட்டில்லோவன்பட்டி விலக்கு பகுதிக்கு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.நேற்று மாலை 3 மணியளவில் சரவணவரன் அந்த மோட்டார் சைக்கிளை மதுரை – நெல்லை நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலையில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் அருகே ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பலமாக மோதியது.இந்த விபத்தில் சரவணவரன் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றினர்.பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்த போது, பாலத்தில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

குறள் 79 (அன்புடைமை அதிகாரம்) குறள் 79:புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம்

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)

வாலிபர் பரிதாப சாவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

குறள் 79 (அன்புடைமை அதிகாரம்) குறள் 79:புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம்

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026)