நம்பமுடியாத பணியை பிரதமர் மோடி இந்தியாவில் செய்திருக்கிறார் : ஜெமி டைமன்

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ‘நம்பமுடியாத பணியை’ செய்திருப்பதாகவும் ‘அமெரிக்காவில் இதில் கொஞ்சம் நாம் செய்வது அவசியம்’ என்றும் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு குறித்து ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு “நம்பமுடியாத கல்வி முறையையும், அடிப்படைக் கட்டமைப்பையும்” பிரதமர் தந்திருப்பது “நம்பமுடியாத பணி” என்று அவர் கூறியுள்ளார். “இதில் சிறிதாவது” அமெரிக்காவில் செய்யவேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் செவ்வாயன்று பொருளாதார மன்றத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜேமி டைமன், “இந்தியாவில் நம்பமுடியாத பணியை  மோடி செய்திருக்கிறார்… 400 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து அவர் மீட்டுள்ளார். நாம் மோடியைப் பற்றி நிறைய பேசலாம்… 400 மில்லியன் மக்கள் கழிப்பறை வசதி பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் எவ்வாறு செய்யப்பட்டன என்பது பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்” என்றார்.

இந்தியாவில் 700 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியிருப்பதாகவும்  அவர் கூறினார். இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. “அவர்கள் (இந்தியா) நம்பமுடியாத கல்வி முறையைக் கொண்டிருக்கிறார்கள். நம்பமுடியாத அடிப்படைக் கட்டமைப்பைப் பெற்றுள்ளனர். அவர்கள் ஒரு மனிதரின் (பிரதமர் மோடி) உறுதி காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றியிருக்கிறார்கள்”.

பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை உடைத்ததால் மோடியை “உறுதிபடைத்தவர்”  என்று அவர் அழைத்ததோடு, “அதேபோல், ஒரு சிலவற்றை இங்கு (அமெரிக்காவில்) நாம் செய்வது அவசியம்” என்றார்.

“ஒவ்வொரு குடிமகனும் கை ரேகை அல்லது கருவிழி அல்லது விரலால் அங்கீகரிக்கப்படுகிறார். 700 மில்லியன் மக்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது” என்று டைமன் கூறினார். இவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனராக  இருப்பவர்.

அமெரிக்கா பற்றி குறிப்பிட்ட டைமன், தேசத்தின் கடன், பணவீக்கம், புவிசார் அரசியல்  மோதல்கள் பொருளாதாரத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார். பணவீக்கத்தோடு, மிக அதிகமான வட்டி விகிதங்கள் எதிர்பார்த்ததை விட, அதிக காலம்   நீடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நிதி நிறுவனர்களுக்கும் (கடன் கொடுப்பவர்களுக்கும்) முறைப்படுத்துவோருக்கும் இடையே கூடுதலான நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய  பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றார். அமெரிக்க ராணுவ பலம், அரசியல் அணி திரட்டல், தேசத்தின் பொருளாதார செயல்பாடு போன்ற விஷயங்கள் இதர நாடுகளுடன்  ஒப்பிடப்பட வேண்டும் என்றும் டைமன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

நம்பமுடியாத பணியை பிரதமர் மோடி இந்தியாவில் செய்திருக்கிறார் : ஜெமி டைமன்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400