தாம்பரம்:
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள `மைதேயி’ சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3-ம் தேதி சிறுபான்மையினரான `குக்கி’ பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலில் மைதேயி இனக்குழுவினரும், குக்கி இனக்குழுவினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள மாநிலமே கலவர பூமியாக மாறியது.
இந்தக் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல மைதேயி சமூகத்தின் நூற்றுக்கணக்கான கோயில்களும் சிதைக்கப்பட்டன. முக்கியமாக இந்தக் கலவரத்தில் குக்கிப் பழங்குடியினர் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்துவந்த கலவரத்தை அடக்குவதற்கு மாநில பா.ஜ.க அரசு தவறிவிட்டது. காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. முதல்வரும் மைதேயி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவுடன் குக்கி பழங்குடிகளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது’ என அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபை சார்பில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து தாம்பரம் பாரதிதிடல் மார்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தாம்பரம் திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தாம்பரம் சி.எஸ்.ஐ. திருச்சபை பொறியாளரும், தாம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ப.சமுவேல் எபிநேசர் ஒருங்கிணைத்தார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





