இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் போட்டி குறித்த சந்தை ஆய்வைத் தொடங்குவதற்கான பரிந்துரையை இந்திய போட்டி ஆணையம் வரவேற்கிறது. பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 03.06.2024 (மாலை 05:00 மணிக்குள்). செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தகுந்த திறனை அறிந்துகொள்வதற்காக செயற்க நுண்ணறிவு மற்றும் போட்டி குறித்த சந்தை ஆய்வை இந்தியப் போட்டி ஆணையம் தொடங்க உள்ளது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் குறிப்பிட்ட நிலைகளை புரிந்து கொள்ளல், சந்தைகள் மற்றும் சூழல் முறைகள், விநியோகச் சங்கிலிகள், போட்டியின் அளவீடுகள், உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வது இந்த ஆய்வின் நோக்கமாகும்.
பரிந்துரைக்கான விரிவான கோரிக்கை, தகுதி வரம்பு மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை https://www.cci.gov.in/images/whatsnew/en/tendernotice-1-11713759672.pdf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.