குடியரசு தின கொண்டாட்டங்கள் 2025: தேசிய பள்ளி இசைக்குழு இறுதிப்போட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 2024-25 -இன் இறுதிப்போட்டி 2025 ஜனவரி 24 & 25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறும். ஜனவரி 25-ம் தேதி பரிசளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்து கொள்வார்.ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலம்) நான்கு அணிகள் வீதம் மொத்தம் 16 இசைக்குழு அணிகள் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமை உணர்வை புத்துயிர் பெறச் செய்யவும், முழுமையான கல்விக்கான பாதையில் அவர்கள் பயணிப்பதை  ஊக்குவிக்கவும் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு( முதல் இடம் – ரூ.21,000/-, 2-வது இடம் – ரூ.16,000/-, 3-வது இடம்- ரூ.11,000), ஒரு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பாதுகாப்பு படைகளின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் நடுவர் குழுவால் மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் 2025: தேசிய பள்ளி இசைக்குழு இறுதிப்போட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.