சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில், சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களை இத்தனை ஆண்டு காலம், தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள், முதல்வரிடம் கோரிக்கை கொடுத்து வலியுறுத்தியே வருகிறார்கள். சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் வலியுறுத்தி உள்ளார்கள். மேலும் திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5 வரை பத்து நாட்களுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடினார்கள்.
அப்போது 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து போராட்டத்தை கைவிட சொன்னார். சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு அதை அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதங்கள் ஆகியும் அதைகூட இன்னும் வழங்கவில்லை, இது வேதனை அளிக்கிறது.
முழு நேரம் வேலை கொடுங்கள், ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் கொடுங்கள் என “அதிமுக ஆட்சியில் பொன்முடி” பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதையாவது திமுக நினைத்து பார்த்து சம்பள உயர்வு அதிகரித்து வழங்க வேண்டும்.
சமீபத்தில் நியமித்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தாவது, பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வவை உயர்த்தி கௌரவமாக நிர்ணயிக்க வேண்டும். உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் நிரந்தரம் செய்வேன் என சொன்னதை முதல்வராகி இன்னும் நிறைவேற்றவில்லை. இப்போ ஆயிரம் நாள் ஆகப்போகுது. எனவே, மனிதாபிமானம் கொண்டு பணி நிரந்தரம் செய்து விடியல் தர வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு