சென்னை:
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்க சேலம் மாவட்டம் சார்பாக தமிழ் நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கங்களின் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரவுண்டானா அருகே மாநில ஆணையம் தமிழ் நாடு அரசு அலுவலக ஒன்றியம் இரா.சண்முகராஜனால் துவங்கப்பட்ட பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே முடிவடைந்தது.
அங்கு முனைவர் கே.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தலைமை செயலக சங்க மாநில தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க எஸ்.தமிழ்செல்வி மற்றும் அரசு ஊழியர்கள் நல சங்கங்களின் சார்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






