சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும்; ஆர்.எஸ்.பாரதி

சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கூறியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய கோரியும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் தொடர் முழுக்க கூட்டங்களை நடத்தினர்…. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி கிரிராஜன், மதிமுக மாநில பொருளாளர் செந்தில் அதிபன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றக் கூறி பலமுறை ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழனை வழக்காடும் முறையாக உயர்நீதிமன்றத்தில் அறிவிக்க ஒன்றிய அரசு தயங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
மெட்ராஸ் ஹைகோர்ட் என்கின்ற வார்த்தையை சென்னை உயர்நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என கூறினால் என்ன தப்பு இருக்கிறது. எனவே தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு உணர்வு கம்மி ஆகிவிட்டது என்பதை நான் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் சம்பாதிக்க ஆரம்பித்த நிலை வந்தவுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று மட்டுமே அனைவரும் எண்ணுகிறார்கள். ஆங்கிலம் என்று கூறி தமிழை எங்கெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அங்கே எல்லாம் எழுச்சி உருவாக வேண்டும்.
18 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதற்கு விடிவுகாலம் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே நமது முதல்வர் தற்பொழுது மீண்டும் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அனுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் இந்தியில் வழக்காடு பொழுது ஒத்துக்கொள்ளக் கூடியவர்கள் தமிழில் வழக்காடினால் என்ன குறை வந்துவிடப்போகிறது. இதற்கான மாறுதல் தமிழ்நாட்டில் தற்பொழுது மேலோங்கி உள்ளது.
இதனை நாம் மிகவும் வேகமாக போராடி பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. பலவேறு மாற்றங்களை ஒன்றிய அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது இன்னும் சிறிது காலம் மௌனம் காத்தாலும் இந்தியில்தான் அனைத்து வழக்கங்களும் வழக்காட வேண்டும் என்கின்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற மொழியாக மாற்றியாக வேண்டிய கால கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது.
குறிப்பாக சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்ற நாம் அனுமதி அளிக்க கூடாது. நம் மீதும் நம் மொழி மீதும் கை வைத்தால் விளைவுகள் பலமாக இருக்கும் என்பதனை வடமாநிலத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு தமிழுக்கு செம்மொழி அந்த சினை தமிழ்நாடு அரசு பெற்றதைப் போல இதையும் தமிழ்நாடு அரசு கூடிய விரைவில் பெறும்.” என்றார்.
கூட்டத்திற்கு வழக்கறிஞர் கு.பாரதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் க.சக்திராணி வரவேற்றார். வழக்கறிஞர் ம.பாரி நோக்க உரையாற்றினார்…. மதிமுக மாநில பொருளாளர் செந்தில் அதிபன் தொடக்க உரையாற்றினார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் எம்எல்ஏ., மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா, தமிழ்த் தேச விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன், மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் சு.க.முரகவேல்ராசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ் மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர பொழிலன், வழக்கறிஞர் தோழர் குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்..

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும்; ஆர்.எஸ்.பாரதி

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு