சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்சென்னை தி. நகர் பகுதியில் நேற்று இரவு இரட்டைக் கொலை நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மாம்பலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சென்னை பாண்டி பஜார் பாபா அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில படுகாயங்களுடன் இறந்து கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்து
அதே பகுதியில் சுமார் 20 மீட்டர் தூரத்தில் மற்றொருவர் உருட்டு கட்டையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்அனுமதித்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மேஸ்திரி ரவிக்குமார் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.இது குறித்து மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில்
ஆந்திரா மாநிலம் சேர்ந்த ரவிகுமார் (40) இவர் தி.நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து தியாகராய நகர் பகுதியில் உள்ள விஐய மஹாலில் மேஸ்திரி ஆக வேலை செய்து வந்தார். அதே போல் டாஸ்மாக் கடையின் அருகே அடித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46) இவரும் அதே விஜயமஹாலில் ஊழியராக பணி புரிந்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ராகேந்திரன் மது அருந்திய போது அப்போது எதிரே மது அருந்திய நபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் அந்த கும்பல் ராஜேந்திரனை பின் தலையில சரமாரியாக தாக்கியதில் சுருண்டு விழுந்த ராஜேந்திரன் சம்பவ இடத்தில் இறந்து போனார் அதே போல் விஜயமாலில் மேஸ்திரி ஆக பணிபுரியும் ரவிக்குமார் திருமண விருந்து முடிந்தவுடன் உணவருந்தும் அறையை சுத்தம் செய்ய வேலை செய்வதற்கு ஊழியர்களை ஆபாசமாக வார்த்தைகளால் திட்டியதாக தெரியவந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சக ஊழியர் மணி என்பவர் உருட்டு கட்டியால் மேஸ்திரி ரவிக்குமாரை சரமாரியாக அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திரனை கொலை செய்த பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த இரட்டைக் கொலையில் சம்பந்தம் ஏதும் உள்ளதா? என்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை
தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்






