விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுசென்னை ஜி.எஸ்.டி. சாலையில், பல்லாவரம் – மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே நேற்று (24.06.2026) இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற விஜயன் (44), சுபாஷினி (42), ரியாஸ்ரீ (10) ஆகியோர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிட்லப்பாக்கம் காவல்துறையினர், வழக்கை முறையாக விசாரிக்காமல் மூடி மறைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை–திருச்சி ஜி.எஸ்.டி. சாலை போன்ற முக்கிய சாலையில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லையா என்ற கேள்வியையும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் எழுப்பியுள்ளனர்.எனவே, இந்த விபத்து குறித்து உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி, தப்பிச் சென்ற வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் விரைவில் கண்டறிந்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.









