சைதாப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளில் ரூ.6.58 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மக்கள் சேவை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளிலிருந்து கழிவுநீர் நேரடியாக அடையாற்றில் கலக்காமல் தாடண்டர் நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய்கள் 1,296 மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. அரசு பண்ணையில் சாலையோர கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜோதியம்மாள் நகரில் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் அதைச் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்து குழாய் 1,221 மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3000 நபர்கள் பயனடைவார்கள்.
இதனைத் தொடர்ந்து, அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளுக்கு ரூ.49.77 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா சாலையிலிருந்து 350 மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தனர். இந்தப் பணிகளை மூன்று மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் ஜோதியம்மாள் நகரில் படிப்பகத்துடன் கூடிய நூலகக் கட்டிடம் கட்டும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இதில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், தலைமைப் பொறியாளர், மண்டல அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சைதாப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு