சென்னை:
தமிழ் மொழி இந்தி மொழியைவிட பழமையானது; தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணித்துவிட முடியாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பனராஸ் பல்கலைக் கழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ரவி பேசுகையில், இந்தி மொழியைவிட தமிழ் மொழிதான் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு நிகரான பழமையான மொழி. தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது என கூறியுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






