அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை துரை ரீதியாகவும் மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணைந்த கரங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர் சந்தித்த புருஷோத்தமன்,
தென்னலூர் பேட்டை, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜீவா பணியாற்றி வருகிறார்.
பள்ளியில் உள்ள கழிப்பறை நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் ஜீவாவை சந்தித்து மனு கொடுத்து விசாரித்த போது பொதுமக்களை தன்னார்வலர்களை அநாகரிகமாக பேசி தகாத வார்த்தைகளில் அவமானப்படுத்தினார். சரி வர பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சரியாக சீர் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது என்று தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப் போன பொது மக்களை அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் நீர்த்தேக்க தொட்டியில் பாசிப்படிந்து இருப்பதால் பள்ளி மாணவிகள் நீர் அருந்தும் போது வயிற்று போக்கு உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் அளிக்காததால் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.