18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
========================================
அருள்வெஃகி ஆற்றின்கண் நிற்றான் பொருள்வெஃகிப்
பொல்த சூழக் கெடும்.
விளக்கம்:
அருளை விரும்பி இல்லற நெறியிலோ அல்லது துறவற நெறியிலோ நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்ற தீய வழிகளைச் சிந்தித்த அளவிலேயே கெட்டுவிடுவான்.







