21. தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
=======================
அறிவினுள் எல்லாந்த தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
விளக்கம்
அறிவுடைய செயல்கள் எல்லாவற்றிலுள்ளும் தலைமையானது எது என்றால் தமக்கு தீமை செய்யும் தம்முடைய பகைவர்க்கும் பதிலுக்குப் பதிலாக தீமையைச் செய்யாமல் விட்டு விடுவதே ஆகும்.







