பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்…!

இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு., 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்று 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. கல்வித்துறை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க திட்டமிட்டது.

எனவே அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டுத் தேர்வை நடத்திக் கடந்த 12 ஆம் தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-தேதிக்கு மாற்றப்பட்டது.

எனவே இவர்களைத் தவிர 1 முதல் 3 ஆம்ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.   மேலும் கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.

எமவே தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியாக உள்ளதால் அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடைக் காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்…!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400