மாவட்ட நிர்வாகம் சார்பில் 2025 பொங்கல் பொருட்கள் முறையாக வாங்குவதை உறுதிசெய்ய சிறப்பு கண்காணிப்புக்குழு

ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்குவதில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் கோரிக்கை.திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி நிலவியதால் மக்களிடையே தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றதுஅப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு மகாராஜ் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்திருந்தார்அதன் விபரம்..பொங்கல் பண்டிகைக்கு திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் குறைவாக தான் வந்துள்ளன.மாவட்ட நிர்வாகம் சார்பில் 2025 பொங்கல் பொருட்கள் முறையாக வாங்குவதை உறுதிசெய்ய சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் பெயர் தொடர்பு எண்கள் அறிவித்துள்ள நிலையில் ரேசன்கடைகளில் வேட்டி சீலை முறையாக வழங்க வில்லை என புகார் அளிக்க தொடர்பு கொண்டால் போன் எடுப்பதில்லைகுறிப்பாக திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள ராமமூர்த்தி நகர் – 2,ரேசன்கடை மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை அருகிலுள்ள ரேசன்கடை எண் 4 மற்றும் கணபதி பாளையம் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள சௌடேஸ்வரி நகரிலுள்ள ரேசன் கடையிலும் வேட்டி சேலை முறையாக வழங்க வில்லை.அதேபோல் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயம்பாளையம் சக்திநகரிலுள்ள தொட்டிபாளையம் ரேசன்கடை மற்றும் அவிநாசி நகரிலுள்ள ரேசன்கடைகளிலும் வேட்டி சேலை முறையாக வழங்க வில்லை. குறிப்பாக அவிநாசி நகரிலுள்ள ரேசன்கடைகயில் வேட்டி சீலை விற்பனையாளருக்கு வேண்டியப்பட்டவர்களுக்கு மட்டுமே போனில் அழைத்து வர சொல்லி ரகசியமாக கொடுத்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய நடுத்தர பாமர மக்கள் கடைக்கு என்ன தான் நடையாய் நடந்தாலும் வேட்டி சேலை முறையாக வழங்க வில்லை எனவும் பொது மக்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.மேலும் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயம்பாளையம் சக்திநகரிலுள்ள தொட்டிபாளையம் ரேசன்கடையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மிஷின்களை தூக்கி மூலையில் போட்டு விட்டு விவசாயிகள் வயல்களில், உழைக்கும் கூழித்தொழிலாளர்கள் வேலை பார்த்துவிட்டு வருவார்களுக்கு முறையாக பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி சீலைகளை வழங்காமல் ரேகை பதிவாக வில்லை மாத கடைசியில் வா என மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பி அலைகழிப்பு செய்து வருகின்றனர்.முறையாக வேட்டி சீலை வழங்காதது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரேசன்கடையில் பொது மக்கள் கேட்டால் 40 சதவீதம் தான் வேட்டி சீலை வந்துள்ளதாக மிஷினில் அதிகாரிகள் பொய்யாக பதிவு செய்துள்ளனர் ஆனால் 20 , 30 சதவீதத்திற்கு குறைவாக தான் வேட்டி சீலை கடைக்கு வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.எனவே உடனடியாக செயற்கையாக குழப்பங்களை ஏற்படுத்திய ரேஷன்கடைகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து தாலுகாவிலுள்ள அனைத்து ரேசன்கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள வேட்டி சீலைகளை முறையாக முழுமையாக வழங்க விரைவாக உரிய தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மாவட்ட நிர்வாகம் சார்பில் 2025 பொங்கல் பொருட்கள் முறையாக வாங்குவதை உறுதிசெய்ய சிறப்பு கண்காணிப்புக்குழு

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு