2022-2023ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவ, மாணவியர்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி நவீன கைக்கடிகாரத்தினை பரிசாக வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற எம்.எச்.சாலை. மார்க்கெட் தெரு, சைதாப்பேட்டை மற்றும் மடுவின்கரை ஆகிய சென்னை பள்ளிகளைச் சார்ந்த என்.காயத்ரி, எஸ்.தவசியம்மாள், ஏ.மோனிஷா, பி.விஷ்ணு வரதன், எஸ்.விஷாலி, டி.அஸ்வினி, எம்.நஸ்ரின் பேகம், எஸ்.ஸ்ரேயா, ஜி.துர்கா மற்றும் எஸ்.ரிஸ்வானா அன்ஜூம் ஆகியோரை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் நவீன கைக்கடிகாரத்தினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி கல்வி பயின்று சிறப்பிடம் பெற்றிட வேண்டும் என்று மாணவர்களுக்கு மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், கல்வி அலுவலர், உதவிக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






