11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: போலி மந்திரவாதி கைது

. தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தனி அறையில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறி 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

♦️. கேரள மாநிலம் கொல்லம் முண்டக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷினு (38). இவர் சங்கு ஜோதிடம் என்ற பெயரில் தன்னுடைய வீட்டில் வைத்து பேய் விரட்டுவது உள்ளிட்ட மந்திரவாதங்களை செய்து வருகிறார். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லத்தை சேர்ந்த ஒரு பெண், மந்திரவாதி ஷினுவை சந்தித்து தன்னுடைய 11 வயது மகளுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்றும், அதற்கு ஏதாவது பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு மறுநாள் மகளை அழைத்து வருமாறு மந்திரவாதி கூறினார்.

♦️. இதன்படி அந்த பெண் தன்னுடைய மகளை அழைத்து கொண்டு மந்திரவாதி ஷினுவை சந்திப்பதற்காக சென்றார். அப்போது மகளை தனி அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஷினு கூறினார். இதைத்தொடர்ந்து மகளை மந்திரவாதியின் அறைக்கு அனுப்பி வைத்து அந்தப் பெண் வெளியே காத்திருந்தார். சுமார் 1 மணி நேரம் கழித்து பயத்துடன் வெளியே வந்த அந்த சிறுமி, மந்திரவாதி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக கொல்லம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ஷினுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பூஜை அறையில் இருந்து ஏராளமான அரிவாள், பிரம்பு மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

♦️. பேய் விரட்டுவதாக கூறி இவர் பாதிக்கப்பட்டவர்களை பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாகவும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு