3 லட்சம் செலவு செய்து ரூ.5க்கு விலை போன வெங்காயம்; வேதனையில் ஆடுகளுக்கு உணவாக்கிய விவசாயி!

இந்தியாவில் சீசனுக்கு ஏற்ப வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை மாறுபடும். இந்த அசாதாரண விலை மாற்றம் என்பது உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடும் அவதியை தருவதாக நீண்ட கால புகார் கூறப்படுகிறது. உற்பத்தி செய்த விவசாய பொருட்களை பெரிய சந்தைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு உரிய உள்ளீட்டு தொகை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இப்படி தான் தற்போது ஆந்திர மாநிலத்திலும் ஒரு விவசாயி வெங்காய விலை வீழ்ச்சியால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். வெங்காய விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆடுகளை மேயவிட்டார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள கய்ரவடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலு, தனது ஐந்து ஏக்கர் விலை நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார்.
தற்போது ஒரு கிலோ வெங்காயம் ஐந்து ரூபாய்க்கு மட்டும் விலை போவதாக கூறப்படுகிறது. மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் விலை வீழ்ச்சி காரணமாக சந்தைக்கு கொண்டு செல்வது நஷ்டம் என கருதிய அவர், மன உளைச்சலில் தன்னுடைய நிலத்தில் ஆடுகளை மேயவிட்டு வெங்காயத்தை ஆடுகளுக்கு உணவாக்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 லட்சம் செலவு செய்து ரூ.5க்கு விலை போன வெங்காயம்; வேதனையில் ஆடுகளுக்கு உணவாக்கிய விவசாயி!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.