அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

Read More »

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட ‘சலோ சன்சாத்’ பேரணியில் பெரும் பரபரப்பும் மோதலும் வெடித்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தடையுத்தரவை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க டெல்லி போலீசாரும், அதிரடிப்படையினரும் (RAF) லத்திக் சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசிடமிருந்து இதுவரை முறையான தெளிவான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Read More »

நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது காவல்துறையினர் அனைவரும் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ஆறுமுகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே, நீதிமன்ற மாண்பைக் காக்கும் வகையில் காவல்துறையினரின் சீருடை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Read More »