தங்கவிலையை தாண்டுமோ தக்காளி விலை? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தக்காளி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன் பின்னர் மாநில அரசு நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்ய தொடங்கியது. அதன் காரணமாக ரூபாய் 90 வரையிலும் தக்காளி விலை குறைந்தது.

தற்போது மீண்டும் பல மாநிலங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

1200 டன் தக்காளிகள் தேவை என்கிற நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று வந்தன. அதன் காரணமாக நேற்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, இன்று ஒரே நாளில் ரூபாய் 30 உயர்ந்து ரூ.140க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாம் ரகத் தக்காளி 130 ரூபாய்க்கும், மூன்றாவது ரக தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் 100 ரூபாயைத் தாண்டியே மொத்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது

சந்தைகளில் இருந்து தக்காளி வாங்கிச் சென்று விற்பனைச் செய்யும் இறுதி வியாபாரி தங்களது கடைகளில் அதிகபட்சமாக ரூபாய் 170 வரையிலும் விற்று வருகின்றனர்.இதனால் கடும் அதிர்ச்சியடைந்த இல்லத்தரசிகளில் பெரும்பாலானோர் தக்காளி இல்லாத சமையலுக்கு பழகி வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கவிலையை தாண்டுமோ தக்காளி விலை? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.