1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (குறள் : 99).
பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந்தரக் காண்கின்றவன் தான் மட்டும்
பிறருக்குத் துன்பம் தரும் வன்சொல்லைக் கூறுவது என்ன பயன் கருதியோ?







