சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு -62க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்கார சென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.07.2023) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த நவீன மீன் அங்காடி கட்டுவதற்கான திட்ட வரைபடத்தினை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை குறித்த காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115க்குட்பட்ட பீட்டர்ஸ் சாலையில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மழைநீர் வடிகால் பீட்டர்ஸ் சாலையில் நியூ காலேஜ் பகுதியிலிருந்து கான்ரான்ஸ்மித் சாலை வரை, மோனகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து கான்ரான்ஸ்மித் சாலை வரை 696 மீ. நீளத்திலும், ஆர்.ஓ.பி. 6வது தெருவில் 113 மீ. நீளத்திலும் அமைக்கப்பட்டு வரும் விவரத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கேட்டறிந்து, இப்பணிகளை தரமாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமு£ன டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர்கள் எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு), எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் (தெற்கு), நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் ரா.ஜெகதீசன், வெ.ஈஸ்வரி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






