திமுக சிறுபான்மை பிரிவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா- முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

சென்னை:
சென்னை பெரம்பூரில் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவின் சார்பில் இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; கிறிஸ்துமஸ் விழாவை நடத்துபவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்துகிறார். மத நல்லிணக்கமே திராவிட மாடல் அரசு. எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை.

இந்தியா பல்வேறு மதத்தினை பின்பற்றி ஒற்றுமையாக இருந்து வரும் நாடு. இந்த திராவிட மாடல் அரசில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மக்களின் ஒற்றுமையை ஒரு கூட்டம் பிரிக்க பார்க்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவி வழங்கினோம். 98% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரூ.6000 நிவாரணத்துக்கு 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நிவாரணத் தொகை கிடைக்காதவர்களுக்கு, நிவாரண உதவி கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் நிவாரண உதவி அறிவித்தோம். சிறுபான்மை மக்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் திடீர் பாசம் வந்துள்ளது என தெரியவில்லை. தமிழ்நாட்டில் வகுப்புவாத சக்திகளால் வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணிதான் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

திமுக சிறுபான்மை பிரிவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா- முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு