திருச்சி மாநாட்டை அடுத்து, கொங்கு மண்டலத்தில் இந்த மாதம் முடிவதற்குள் மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். இந்திய தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டது. இதனால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், இனி மக்கள் மன்றத்தை நாடி நியாயம் கேட்கப்போவதாக கூறினார். அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது.
பெரிய கூட்டத்துக்கு இந்த மாநாடு தமிழ்நாடு முழுவதும் ஆட்களை திரட்டி வந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதுடன், அதிமுகவை எடப்பாடி அழித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் இந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றதாக கருதுகின்றனர். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில், எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.
‘அதிமுக தொண்டர்களிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக ஆதரவு இந்த ஆலோசனை கூட்டத்தின்போத கிடைத்த்து. அதனால், ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வதுடன், பொதுக்கூட்டமும் நடத்தி, தற்போது அதிமுகவில் நடைபெறும் துரோகத்தை பற்றி விளக்கி கூற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக, எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் அதாவது கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்த பகுதியில் இருந்துதான் அதிக அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்த வேண்டும், அந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் எழுச்சி உரையாற்றவும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் தனது அரசியல் வேகத்தை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.







