பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது,மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா.கணபதி, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,மண்டலக்குழுத் தலைவர் திரு.நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர் ஏ.ஸ்டாலின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






