சென்னை:
பா.ஜ.க. ஆட்சி நடத்தி வரும் மணிப்பூர் மாநிலத்தில் மாதக்கணக்கில் கலவரம் வெடித்து வருகிறது. குக்கி இனத்துக்கும் மெய்த்தி இனத்துக்கும் இடையேதான் இந்த வன்முறை வெடித்துள்ளது. குக்கி இனத்தைபோல் தங்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்பதே மெய்த்தி இனத்தவரின் கோரிக்கையாக உள்ளது.
இதனால் அந்த மாநிலத்தில் பல்வேறு வகையில் கலவரங்கள் வெடித்து வருகிறது. இந்த கலவரம் காரணம் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலகை உலுக்கியது. இதற்கிடையே நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இதில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனால் கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து மக்களவை, மாநிலங்களை முடங்கி வருகிறது. வன்முறை சம்பவத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னையை அடுத்த தி.நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் சாதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






