சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் பாதுகாப்பு கருவி மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NHHID) மருத்துவ சாதன மேம்பாடு மற்றும் வணிக மயமாக்கலுக்காக புது டெல்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு கருவிகளின் உள்நாட்டு மேம்பாட்டிற்கான நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பில் ஆர்வம் கொண்டவர்கள் Special Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Special Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து UG/PG Degree in Science / Engineering Full Time with MBA (Full Time/ Part Time) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 வருடம் நிர்வாகம் & நிதிதுறையில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை 12.07.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






